Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓ.பி.எஸ் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓபிஎஸ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓ.பி.எஸ் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ThangaveluBy : Thangavelu

  |  25 Oct 2021 11:39 AM GMT

சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓபிஎஸ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். மேலும் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார்கள் என பேசியிருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓபிஎஸ்தான். மேலும் அதிமுகவை பொருத்தவரையில் பொதுக்குழு நீக்கிவிட்டது. எனவே சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது என தலைமை ஒருங்கிணைப்பாளர் உட்பட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைவருமே கையெழுத்திட்டிருக்கிறோம். எனவே சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News