Kathir News
Begin typing your search above and press return to search.

அ.ம.மு.க-விலிருந்து விலகியவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்!

அமமுக கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

அ.ம.மு.க-விலிருந்து விலகியவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2021 5:54 AM GMT

அமமுக கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம், அருகே உள்ள டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் மதுரை மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


அப்போது இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: அமமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திமுகவில் சேர்ந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பழனியப்பனை போன்று அமமுகவில் இருந்து பலரும் விலக உள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் அதிமுக தொண்டர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News