Kathir News
Begin typing your search above and press return to search.

எஸ்றா சற்குணம் மதவெறியர்.. குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா.!

எஸ்றா சற்குணம் மதவெறியர்.. குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா.!

எஸ்றா சற்குணம் மதவெறியர்.. குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2020 9:39 AM GMT

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பேராயர் எஸ்றா சற்குணத்தை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், என பா.ஜ.க., மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடந்தது. அதில், பேராயர் எஸ்றா சற்குணம் பேசியதாவது: நாம் பேசக்கூடிய குரலானது, டெல்லியில் எதிரொலிக்க வேண்டும். மோடியின் காதுல போய் விழ வேண்டும். நான்கு பணக்காரர்களை ஆதரிக்க வேண்டும் என்பது தான், அவரது கடமை. ஏழைகளை பற்றி கவலையே இல்லை. அவருக்கு, கொஞ்சமாவது கடவுள் பயம் இருந்திருந்தால், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார்.

அந்த ஆள் கடவுளை பற்றி பேசுகிறாரே தவிர, கடவுள் பயம் கிடையாது; மனித பயமும் கிடையாது. இந்த நாட்டை ஆளுகிற தகுதி, அவருக்கு என்ன இருக்கிறது. அவர் அகற்றப்படுகிற வரை, கஷ்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். அவருக்கு கஷ்டம், நஷ்டம் என, எதுவும் தெரியவில்லை. இவ்வாறு, அவர் பேசினார். எஸ்றா சற்குணத்தின் பேச்சு பா.ஜ.க.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சற்குணத்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது பற்றி பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா கூறியதாவது: பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில், எஸ்றா சற்குணம் அவதூறாக பேசியுள்ளார். பிரதமரை எப்படி அவதூறாக அவர் பேசலாம், சர்ச்சில் போய் பேசட்டும். ஊழியம் செய்யட்டும். பிரதமர் பற்றி, விவசாயிகள் சங்க கூட்டத்தில் பேச என்ன வேலை இருக்கிறது. சற்குணம் ஒரு மத வெறியர்.

இந்துக்கள் முகத்தில் இரண்டு குத்து குத்த வேண்டும். ரத்தம் வர வேண்டும் எனச் சொன்ன தீய சக்தியான சற்குணம் பேசியதை கண்டிக்கிறேன்.
தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வரும் சற்குணத்தை, நிரந்தரமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News