Kathir News
Begin typing your search above and press return to search.

ஆ.ராசாவின் கருத்தை கண்டித்த பா.ஜ.க நிர்வாகி மீது பொய் வழக்கு - அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆ. ராசாவின் கருத்தை கண்டித்து பா.ஜ.க நிர்வாகி மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு அண்ணாமலை குற்றச்சாட்டு.

ஆ.ராசாவின் கருத்தை கண்டித்த பா.ஜ.க நிர்வாகி மீது பொய் வழக்கு - அண்ணாமலை குற்றச்சாட்டு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Sep 2022 3:30 AM GMT

மதுரையில் பாரதிய ஜனதா மாநில கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், தி.மு.க MP ஆ. ராசாவின் கருத்துக்கு இந்து அமைப்பு சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்..இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவருக்கு இந்த சர்ச்சை பேச்சு புதிதல்ல. தி.மு.கவில் இருப்பவர்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்று பேசுவது வழக்கம்தான்.


மக்களின் எதிர்ப்பை அவர்களை சம்பாதித்து வருகிறார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஆ.ராசா மக்களிடம் அவமதிப்பை பெரும் பகுதியில் தான் பேசி வருகிறார். சர்ச்சையான புதுப்புது கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவருடைய பேச்சை காண்பித்த கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள் தமிழக முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர் மீதும் பொய் வழக்குகளும் போடப்பட்டு உள்ளன. ஆ.ராசாவின் கருத்து சரிதான் என்று அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் யாரும் கூறவில்லை. ஆ.ராசாவுக்கு எதிராக மக்கள் கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள் இயக்கத்தில் பங்கெடுத்து உள்ளனர்.


இதனை கவர்னர், ஜனாதிபதி ஆகியோருக்கு கொண்டு செல்வோம். இதுபோல் ஆ.ராசா மீது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான புகார்கள் கொடுத்து வருகின்றன. எனவே இந்த சட்சியான கருத்துக்களை இனி மேலும் பேசினால், இந்துக்கள் உட்பட எந்த ஒரு மதத்தினரும் தி.மு.கவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் லாபத்திற்காக இதுபோன்று பேசி வருகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Malaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News