Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சியில் கொடிக்கம்பம் சேதம்.. டி.எஸ்.பியிடம் புகார் அளித்த பா.ஜ.க.,வினர்.!

திருச்சியில் கொடிக்கம்பம் சேதம்.. டி.எஸ்.பியிடம் புகார் அளித்த பா.ஜ.க.,வினர்.!

திருச்சியில் கொடிக்கம்பம் சேதம்.. டி.எஸ்.பியிடம் புகார் அளித்த பா.ஜ.க.,வினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2021 7:18 PM GMT

திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூரில் பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி திருவெறும்பூர் டி.எஸ்.பி.யிடம் அக்கட்சியினர் புகார் அளித்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தலூர். இந்த ஊரில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாஜக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதற்காக அங்கு நடப்பட்ட கொடிக்கம்பத்தை நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதனை அகற்றியதாக தெரிகிறது. இது பற்றிய தகவல் திருச்சி மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது.

இதனையடுத்து, தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று சேதப்படுத்திய கொடி கம்பத்தை பார்வையிட்டனர். இதன் பின்னர் கொடிகம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவெறும்பூர் டி.எஸ்.பி., சுரேஷ்குமாரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

அப்போது திருவெறும்பூர் தெற்கு மண்டல தலைவர் மகாசக்தி முருகேசன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் சி.இந்திரன், மற்றும் வடக்கு மண்டல தலைவர் சக்திவேல், திருவெறும்பூர் மண்டல தலைவர் பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜராஜன், நிர்வாகிகள் பாஸ்கர், சகாயராஜ், சூரியூர் பாலு, சிவாஜி, சர்ச்சில், செந்தில்குமார். மில்லர். சூரியூர் சுப்ரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News