Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலாவால் அ.ம.மு.கவையே நிலைநிறுத்த முடியவில்லை, இதில் அ.தி.மு.க.வை காப்பாற்றுவதாக கூறுகிறார் - சி.வி.சண்முகம் பேச்சு!

எத்தனை சசிகலா வந்தாலும் அதிமுகவை துளிகூட அசைத்து பார்க்க முடியாது என்று விழுப்புரத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சசிகலாவால் அ.ம.மு.கவையே நிலைநிறுத்த முடியவில்லை, இதில் அ.தி.மு.க.வை காப்பாற்றுவதாக கூறுகிறார் - சி.வி.சண்முகம் பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  18 Oct 2021 4:57 AM GMT

எத்தனை சசிகலா வந்தாலும் அதிமுகவை துளிகூட அசைத்து பார்க்க முடியாது என்று விழுப்புரத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் பங்குபெற்று சி.வி.சண்முகம் பேசியதாவது: அமமுகவை நிலை நிறுத்த முடியாதவர் அதிமுகவை காப்பாற்றுவதாக கூறுகிறார். இதனை அதிமுக தொண்டர்கள் ஒருவர் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மேலும், அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா மூலம் தற்போது வரை மக்களின் சக்தியை கொண்டுள்ள கட்சியாக அ.தி.மு.க உள்ளது. 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக பல்வேறு வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது சகஜம்தான். தற்போது தோல்வியை தழுவினாலும் மீண்டும் வெற்றி பெறும். இந்த இயக்கத்தை எத்தனை துரோகிகள் வீழ்த்த நினைத்தாலும் அவர்கள்தான் அழிவார்கள். மேலும், அவர்கள் தோற்றுவித்த அமமுகவையையே நிலை நிறுத்த முடியவில்லை என்று சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

Source: Dinakaran

Image Courtesy:Vikatan


Next Story
கதிர் தொகுப்பு
Trending News