Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னாள் அமைச்சர் வீட்டில் எதுவும் கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத்துறை.!

கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்கள் என்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் வீட்டில் எதுவும் கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத்துறை.!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2021 12:38 PM GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதுவும் கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பி சென்ற நிகழ்வு நடந்துள்ளது.

கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்கள் என்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


இதனால் கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு முன்பாக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அதிமுகவினர் ஒரே இடத்தில் குவிந்ததால் அப்பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில், சென்னையில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News