Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபு.!

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபு.!

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2020 1:41 PM GMT

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இது குறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு செயல்திறன் மற்றும் சமூக அக்கறை கொண்டதால் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர்.


இன்னும் 8 ஆண்டுகள் அரசு பணி இருந்தும் பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் உயரிய நோக்கில் தான் வகுத்த உயர் பதவிகளில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

தற்போது தமிழகத்தை சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்து இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக சரியான முடிவினை எடுத்த சந்தோஷ் பாபு மனதார பாராட்டுகிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News