Kathir News
Begin typing your search above and press return to search.

தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது.!

நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். திருமணம் செய்துகொள்வதாக குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாக குறிப்பிட்டிருந்தார்.

தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 Jun 2021 5:09 AM GMT

துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். திருமணம் செய்துகொள்வதாக குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாக குறிப்பிட்டிருந்தார்.




இதனையடுத்து மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமின்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தன்னை தேடி வருவதை அறிந்த மணிகண்டன் தலைமறைவாக இருந்த நிலையில், பெங்களூருவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News