Kathir News
Begin typing your search above and press return to search.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர் ! - கே.சி.வீரமணி !

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர் ! - கே.சி.வீரமணி !
X

ThangaveluBy : Thangavelu

  |  17 Sept 2021 9:00 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து அவரது வீடு மற்றும் நண்பர்கள் வீடு, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இந்நிலையில், சோதனை குறித்து கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இருப்பதாகவும், எந்த வழக்கையும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.

Source, Image Courtesy: Polimer News


Next Story
கதிர் தொகுப்பு
Trending News