Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜேந்திர பாலாஜி எப்போது வருவார்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் பேட்டி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரியான நேரத்தில் வருவார் என்று முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் கூறியுள்ளார். அமைச்சராக இருந்தபோது விருதுநகர் மாவட்டத்தில் ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக ரூ.3 கோடி அளவிற்கு பணம் மோசடி பெற்றதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி எப்போது வருவார்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் பேட்டி!

ThangaveluBy : Thangavelu

  |  30 Dec 2021 12:25 PM GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரியான நேரத்தில் வருவார் என்று முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் கூறியுள்ளார். அமைச்சராக இருந்தபோது விருதுநகர் மாவட்டத்தில் ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக ரூ.3 கோடி அளவிற்கு பணம் மோசடி பெற்றதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மற்றும் அவர்களின் உறவினர்கள், கட்சியினரை சேர்ந்தவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ., ராஜவர்மன் மற்றும் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

இதில் இருவரும் கலந்து கொண்ட பின்னர் வெளியில் வந்தனர். அப்போது ராஜவர்மன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "சரியான நேரத்தில் ராஜேந்திர பாலாஜி வருவார். அவர் எங்கேயும் ஓடி ஒளியும் அளவிற்கு கொலை குற்றம் எதுவும் செய்யவில்லை. நீதிமன்றத்தின் வாயிலாக நிரபராதி என்று நிரூபித்து காட்டுவார்''என்று கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News