Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - செயலாளர், டி.ஜி.பி'க்கு அண்ணாமலை அவசர கடிதம்!

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் செயலாளர் மற்றும் DGPக்கு அண்ணாமலை கடிதம்.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - செயலாளர், டி.ஜி.பிக்கு அண்ணாமலை அவசர கடிதம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Sep 2022 2:37 AM GMT

தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒத்துழை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பிக்கு அண்ணாமலை அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட வேலையில், பா.ஜ.க அலுவலகங்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தை தமிழக பா.ஜ.க துணை தலைவர் நாகராஜன், திருப்பதி நாராயணன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாஸ் அடங்கி குழுவினர் உள்துறை முதன்மை செயலாளர் அவர்களிடம் நேற்று நேரில் சென்று வழங்கி உள்ளார்கள்.


கடிதத்தில் அண்ணாமலை விடுத்துள்ள வேண்டுகோள்கள் பின்வருமாறு சட்ட விரோத நடவடிக்கைகளை கையில் எடுத்து ஈடுபடக்கூடிய நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களுக்கு நிர்வாகிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவையான இடங்களில் அவசியம் கருதி பாதுகாப்பு ரோந்து மற்றும் பிற கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதத்தினை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரிக்கும் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: BBC News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News