Kathir News
Begin typing your search above and press return to search.

7 பேர் விடுதலையில் ஆளுநர் பேச்சு வருத்தம் அளிக்கிறது.. விஜயகாந்த்.!

7 பேர் விடுதலையில் ஆளுநர் பேச்சு வருத்தம் அளிக்கிறது.. விஜயகாந்த்.!

7 பேர் விடுதலையில் ஆளுநர் பேச்சு வருத்தம் அளிக்கிறது.. விஜயகாந்த்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Feb 2021 6:12 PM GMT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், மேலும் காலதாமதம் செய்யாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்: பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழக ஆளுநர் முடிவெடுத்து அவங்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இருப்பது உண்மையிலேயே அனைவரையும் மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த 7 பேரையும், மேலும் காலதாமதம் செய்யாமல், ஒரு நல்ல தீர்ப்பு வழங்கி, விடுதலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News