Kathir News
Begin typing your search above and press return to search.

மேடையில் பேசும்போது மயங்கிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி.!

மேடையில் பேசும்போது மயங்கிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி.!

மேடையில் பேசும்போது மயங்கிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2021 10:08 AM GMT

குஜராத் முதலமைச்சர் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கலந்து கொண்டார். அப்போது மேடையில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார்.

இதனிடையே பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழத்தொடங்கினார். இதனை கவனித்த அவரது பாதுகாவலர் தாங்கிபிடித்தார். முதலுதவி மேடையில் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முதலமைச்சருக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனை பொருட்படுத்தாமல் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் என்று அம்மாநில பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News