குஜராத்திற்கு தேவை இரட்டை இன்ஜின் அரசு - மக்கள் முன்பு மோடி நிகழ்த்திய உரை
'குஜராத்தை குண்டு வெடிப்புகளில் இருந்து பாதுகாக்க பாரதிய ஜனதாவின் இரட்டை எஞ்சின் அரசால் மட்டுமே முடியும்' என குஜராத் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
By : Mohan Raj
'குஜராத்தை குண்டு வெடிப்புகளில் இருந்து பாதுகாக்க பாரதிய ஜனதாவின் இரட்டை எஞ்சின் அரசால் மட்டுமே முடியும்' என குஜராத் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
குஜராத்தை குண்டு வெடிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனில் அது பா.ஜ.க'வின் இரட்டை எஞ்சின் அரசால் மட்டுமே முடியும் என பிரதமர் மோடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநில தேர்தலை முன்னிட்டு கெடா பகுதியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி மாபெரும் மக்கள் வெள்ளத்தின் முன்னால் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, '2014 ஆம் ஆண்டு மக்கள் அளித்த வாக்குகள் நாட்டின் பயங்கரவாதத்தை அழிப்பதில் நிறைய மாற்றங்களை உருவாக்கியது' என்றார். மேலும் பயங்கரவாதிகளின் மீது எடுத்த நடவடிக்கை எடுத்தபோதெல்லாம் காங்கிரஸ் அதனை குறை கூறியது' என குற்றம் சாட்டினர் பிரதமர் மோடி.