Kathir News
Begin typing your search above and press return to search.

காட்பாடி தொகுதி வெற்றி.. அமைச்சர் துரைமுருகனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழக நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட துரைமுருகன் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காட்பாடி தொகுதி வெற்றி.. அமைச்சர் துரைமுருகனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2021 6:25 AM GMT

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட துரைமுருகன் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை இன்று விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகளில் துரைமுருகன் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகள் 4 வாரத்திற்குள் பதில் தரவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த உத்தரவால் துரைமுருகன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். சொற்ப வாக்கு எண்ணிக்கையில்தான் அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த வழக்கு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News