"அய்யே விபூதியவா சாப்புடுற?" - இந்து மத அடையாளமான விபூதியை அவமதித்து நிகழ்ச்சி நடத்திய கலைஞர் தொலைக்காட்சி !
By : Mohan Raj
தி.மு.க'வின் கலைஞர் தொலைக்காட்சி இந்து மதத்தை அடையாளமான விபூதியை "இழிவானதொரு பொருள் அதையா சாப்பிடுகிறீர்கள்" என அவமதித்துள்ளது.
திராவிடர் என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் அவமதிக்கும் தி.மு.க'விற்கு சொந்தமான 'கலைஞர்' தொலைக்காட்சி இந்துக்களின் அடையாளமாக கருதப்படும் விபூதியை அருவருப்பான பொருள் போன்று அவமதித்துள்ளது. 'கலைஞர்' தொலைக்காட்சியில் நடிகர் இமான் அண்ணாச்சி குழந்தைகளை மையப்படுத்திய ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளை மையமாக உட்கார வைத்து அவர்களின் பெற்றொர்களிடம் வேடிக்கையாக கேள்வி எழுப்புவது போல் உருவாக்கப்படும் நிகழ்ச்சியாகும்.
இதில் ஒரு பெண் குழந்தையின் பெற்றொர் என் மகள் விபூதியை விரும்பி சாப்பிடுவாள் என கூறுவதற்கு நிகழ்ச்சியை நடத்து இமான் அண்ணாச்சி "விபூதி எப்படி தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா? மாட்டுச் சாணத்திலிருந்து!" என அருவருப்பான முக பாவத்துடன் கூறுகிறார்.
மீண்டும் குழந்தையிடம்
"நீங்கள் உண்மையில் விபூதியை சாப்பிட விரும்புகிறீர்களா? அது உண்மையில் சாணம்! உங்களுக்கு கொடுக்கப்பட்ட சாணத்தை நீங்கள் சாப்பிடுவீர்களா?" என அருவருப்பான முகத்துடன் கேட்கிறார். கேட்பது மட்டுமின்றி அந்த குழந்தையிடம் அது சாப்பிடக்கூடாத பொருள் என்பது போல கூற முயற்சித்துள்ளார்.
இந்துக்களின் புனித அடையாளமான விபூதியை அவமதித்து இது போன்ற நிகழ்ச்சியை தி.மு.க'வின் கலைஞர் தொலைக்காட்சி அவமதித்துள்ளது. இது தணிக்கை செய்யப்படும் நிகழ்ச்சியாகும், கொஞ்சமாவது இந்துக்கள் மனது புண்படுமே என நினைத்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை அனுமதித்திருக்க மாட்டார்கள்! இந்துக்களை எப்படி வேண்டுமானாலும் ஏளனம் செய்யலாம் என்ற உள்நோக்கம் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சி அனுமதித்துள்ளது.