Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  2 April 2022 10:12 AM GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் ஏராளமான மக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களும் ஆர்வமாக பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்களிடையே நேரடியாக சென்று மத்திய அரசு திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்து வருகின்றார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில நச்சுகள் அண்ணாமலைக்கு அச்சுறுத்தல்களை விட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. அது மட்டுமின்றி இஸ்லாமியர் ஒருவர் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் தொடர்ந்து பாஜக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அண்ணாமலைக்கு மிரட்டல்கள் வருவதை மத்திய உளவுத்துறை அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

இந்நிலையில், அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இதனால் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Indian Daily Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News