Kathir News
Begin typing your search above and press return to search.

'இப்படி நீங்களே எல்லா டாஸ்மாக் பார் எடுத்துக்கொண்டால் நாங்கள் எப்படி பிழைப்பது?' - கொந்தளிப்பில் பார் உரிமையாளர்கள்

தமிழக முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம் விடுவதில் விதிமுறைகள் நடந்துள்ளது என பார் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இப்படி நீங்களே எல்லா டாஸ்மாக் பார் எடுத்துக்கொண்டால் நாங்கள் எப்படி பிழைப்பது? - கொந்தளிப்பில் பார் உரிமையாளர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  19 Aug 2022 6:52 AM GMT

தமிழக முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம் விடுவதில் விதிமுறைகள் நடந்துள்ளது என பார் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழக முழுவதும் உள்ள 3,240 டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.


இந்த ஏலத்தில் பங்கேற்க 2ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அதாவது தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பர்கள் ஒதுக்கீடு செய்வதற்காக மற்றவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுக்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் ஆளுங்கட்சிணர் இருப்பதாகவும் குற்றம் எழுந்துள்ளது, இந்த நிலையில் பங்கேற்க விரும்புவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுப்பது எதிர்த்து சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏலத்தில் பங்கேற்க விரும்புவர்களுக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பம் வழங்க மறுப்பதால் ஆன்லைன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கும் பட்சத்தில் அதனை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கட்டிட உரிமையாளர்களிடம் ஆட்சேபனை இன்மை சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும், இந்த சான்றிதழை பெறுவதற்கு கட்டிட உரிமையாளர்களை ஆளுங்கட்சி ஆட்கள் மிரட்டுவதாகவும் தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் அன்பரசன் கூறியதாவது, 'ஒவ்வொரு பார் உரிமையாளரும் இரண்டு வாடகை மாத வாடகை செக்யூரிட்டி டெபாசாக செலுத்தி உள்ளனர் இதிலிருந்து நிலுவைத்தது பிடித்தம் செய்ய வேண்டும்.


ஆனால் இதை செய்யாமல் முந்தைய ஒப்பந்தக்காரர் நிலுவைத்தொகையை புதிதாக வருபவர் மீது சுமத்துவது நியாயமற்றது, டாஸ்மாக் பார் ஏலம் வெளிப்படையாக நடப்பதாக தெரிவதில்லை இதனால் பலர் ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது விண்ணப்பம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News