Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை!- திடீர் பல்டி அடிக்கும் அமைச்சர் சேகர்பாபு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை என்று இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை!- திடீர் பல்டி அடிக்கும் அமைச்சர் சேகர்பாபு!

ThangaveluBy : Thangavelu

  |  25 Oct 2021 5:38 AM GMT

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை என்று இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா வசதியுடன் உலோகத் திருமேனி பாதுகாப்பு அறையை திறந்து வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பராமரிப்பு இல்லாத திருக்கோயில்களைக் கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்காக பணியை மாநில அரசு மேற்கொள்கிறது. சுற்றுலாத்துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம் பின்னர் செயல்படுத்தப்படும் என்றார்.

மேலும் அவர் பேசும்போது, பாஜக தலைவர் அண்ணாமலை மீது நான் கைவைப்பேன் என்று சொல்லவில்லை. அன்பால் கூட ஒருவர் மீது வைக்கலாம். நிலைதடுமாறும்போது கை கொடுத்து காப்பாற்றலாம். பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அண்ணாமலை அப்படி சொல்லியிருக்கலாம் என்று சேகர்பாபு கூறினார். இவரது பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கை வைப்பேன் என்று சொல்லிவிட்டு தற்போது அன்பால்தான் கைவைப்பேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

Source: News 7

Image Courtesy:The Hindu


Next Story
கதிர் தொகுப்பு
Trending News