'காலையில் பயத்துடனே எழுகிறேன், என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்' - தலைவரான சந்தோசத்தை கூட அனுபவிக்க விடாமல் முதல்வர் ஸ்டாலினை படுத்தும் தி.மு.க'வினர்
'என்னை நிம்மதியாக உறங்கி விடமாட்டேன் என்கிறீர்களே?' என முதல்வர் ஸ்டாலின் பேசியது தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
By : Mohan Raj
'என்னை நிம்மதியாக உறங்கி விடமாட்டேன் என்கிறீர்களே?' என முதல்வர் ஸ்டாலின் பேசியது தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க'வின் 15 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க'வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்பொழுது பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, 'ஒருபுறம் நான் தி.மு.க தலைவர் என்ற பதவி, மறுபுறம் தமிழக முதல்வர் என்ற பதவியில் உள்ளேன். மழை பெய்தாலும் சரி பெய்யாவிட்டாலும் சரி என்னைத்தான் குறை சொல்வார்கள்.
அப்படி இருக்கையில் உடன்பிறப்புகளின் நடவடிக்கைகள் என்னை ரொம்ப மன கஷ்டத்தில் ஆழ்த்துகிறது. காலையில் எழுந்தவுடன் இன்று ஏதேனும் பிரச்சினையும் சிக்காமல் இருக்க வேண்டுமே! என்ற நினைப்பு வருகிறது' என பேசினார்.
கடந்த சில நாட்களாக தி.மு.க அமைச்சர்கள் இந்து மதம் பற்றியும், மக்களை ஓசி என கேலி செய்வதற்கு பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஏன் இப்படி என்னை இம்சை செய்கிறீர்கள் என முதல்வர் பேசியது இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.