Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து மதத்தை இழிவுபடுத்தும் திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. வேலூர் இப்ராஹிம் அதிரடி.!

இந்து மதத்தை இழிவுபடுத்தும் திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. வேலூர் இப்ராஹிம் அதிரடி.!

இந்து மதத்தை இழிவுபடுத்தும் திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. வேலூர் இப்ராஹிம் அதிரடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jan 2021 7:55 AM GMT

திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தினால் அவருக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராஹிம் அதிரடியாக பேசினார்.

கோவையில் பா.ஜ.க., அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில், மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால், இந்து, முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்கள், திராவிட கட்சிகள் இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனை முதலில் ஈ.வெ.ரா., செய்தார். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்கிறார். இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்வதோடு, இந்து மதத்தை பற்றி இழிவாக பேசி வருகிறார்.

நம் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்கின்றனர், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர். அத்தகைய அமைப்புகளோடு, திருமாவளவன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து இதேபோன்று இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவாக பேசினால், திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும். திருமாவளவன் கட்சியினர், சில இடங்களில் நான் நுழையக் கூடாது என்கின்றனர்.

இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை. மத நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என பிரசாரத்தை தொடர்வேன். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஆதரித்து, நடைமுறைப் படுத்தி உள்ளது அ.தி.மு.க., அரசு. அத்தகையை திட்டங்களை தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். வெறும் அரசியல் லாபத்திற்காக செய்கிறார் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு, அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News