Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலாவை ஆதரித்தால் மீண்டும் பரதனாகலாம்.. மறைமுகமாக ஓ.பி.எஸ்க்கு தூதுவிடும் டி.டி.வி.தினகரன்.!

சசிகலாவை ஆதரித்தால் மீண்டும் பரதனாகலாம்.. மறைமுகமாக ஓ.பி.எஸ்க்கு தூதுவிடும் டி.டி.வி.தினகரன்.!

சசிகலாவை ஆதரித்தால் மீண்டும் பரதனாகலாம்.. மறைமுகமாக ஓ.பி.எஸ்க்கு தூதுவிடும் டி.டி.வி.தினகரன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Feb 2021 7:02 PM GMT

சென்னை தி.நகரில் சசிகலாவை சந்தித்த பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, சசிகலா நலமுடன் இருக்கிறார். வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார்.

மேலும் பேசிய அவர், பரதனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்து விட்டார். தற்போது அவர் மன அழுத்தத்தில் உள்ளார்.

சசிகலா நிலைப்பாடு எடுத்தால் அதனை வரவேற்போம். அவர் மீண்டும் பரதனாக ஏற்றுக்கொள்வோம் என்று குறிப்பிட்டார். தற்போது மீண்டும் அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தினகரனின் பேட்டி அமமுகவிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News