Kathir News
Begin typing your search above and press return to search.

'காரியம் ஆகனும்னா சபரீசன் கிட்ட போகணும்!' - போட்டு உடைத்த முன்னாள் அமைச்சர் சிவபதி

'ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் தான் போய் பேச வேண்டும் என்ற நிலை உள்ளது' என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.

காரியம் ஆகனும்னா சபரீசன் கிட்ட போகணும்! - போட்டு உடைத்த முன்னாள் அமைச்சர் சிவபதி

Mohan RajBy : Mohan Raj

  |  2 May 2022 10:45 AM GMT

'ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் தான் போய் பேச வேண்டும் என்ற நிலை உள்ளது' என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியதாவது, 'ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க கொடுத்தனர் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளைக் கிடப்பில் போடுகின்றனர், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள அப்பொழுது நீங்கள் ஏமாந்து விடக்கூடாது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'தி.மு.க'வினர் 10 வருடம் ஆட்சி இல்லாமல் காய்ந்து போய் உள்ளனர், மக்கள் தெளிவாகி விட்டனர் அடுத்த முறை மக்களை அ.தி.மு.க'வை ஆட்சியில் அமர வைப்பதற்கு தயாராகிவிட்டனர். தி.மு.க ஆட்சி குடும்ப ஆட்சி குடும்பத்தின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது. இன்று ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் போய் தான் பேச வேண்டும் என்ற நிலை உள்ளது' என்றார்.


'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம், மதுவிலக்கு கொண்டு வருவோம் என தி.மு.க கூறியது ஆனால் தற்போது டாஸ்மாக் வருமானத்தில் தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது டாஸ்மாக்கை மூடினால் ஆட்சியே மூடும் நிலைமை ஏற்படும். இதே நிலை நீடித்தால் இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை' என பேசினார்.


Source - News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News