Kathir News
Begin typing your search above and press return to search.

டி.வியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான் வராரு.. ஜெயக்குமார் விமர்சனம்!

தொலைக்காட்சியை ஆன் செய்தாலே முதலமைச்சர் ஸ்டாலின்தான் வரார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

டி.வியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான் வராரு.. ஜெயக்குமார் விமர்சனம்!

ThangaveluBy : Thangavelu

  |  6 Feb 2022 7:11 AM GMT

தொலைக்காட்சியை ஆன் செய்தாலே முதலமைச்சர் ஸ்டாலின்தான் வரார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினரை முந்திக்கொண்டு அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனிடையே அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதே போன்று வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஜெயக்குமார் பங்கேற்று பேசியதாவது, '' அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள், மற்றும் பெண்களுக்கு விலையில்லா ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம் என்று பல சொல்லிக்கொண்டே போகலாம். அதே போன்று சென்னையில் பேரிடர் ஏற்படும்போது பல நிவாரணப் பணிகளை அதிமுக அரசு முடுக்கிவிட்டது. இதனை எல்லாம் வாக்காளர்களிடம் எடுத்துக்கூறி அதிமுகவினர் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், திமுகவின் பித்தலாட்ட ஆட்சியை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். அதிலும் பொங்கலுக்கு வழங்கிய பரிசுப் பொருட்கள் என்ற பெயரில் குப்பையை வழங்கினர். அதிலும் தொலைக்காட்சியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான் வராறு. திடிரென்று வந்தாரு.. போனாரு.. ரிப்பீட்டு இதே போன்றுதான் ஸ்டாலின் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் திமுகவினர் 86 வார்டுகளில் கலவரத்தை நடத்தினர். எனவே திமுகவினர் இந்த முறையும் கலவரங்களில் ஈடுபடுவர் எனவே அதிமுக முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Source: Asianetnews

Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News