Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தரப் பிரதேசம் நம்பர் 1 இருக்க பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள்: பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு!

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மற்றும் சஹாரன்பூர் பகுதிகளில் வீடு, வீடாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.

உத்தரப் பிரதேசம் நம்பர் 1 இருக்க பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள்: பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  29 Jan 2022 1:23 PM GMT

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மற்றும் சஹாரன்பூர் பகுதிகளில் வீடு, வீடாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பின்னர் அவர் பேசியதாவது: சமாஜ்வாதிக் கட்சியும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியும் கூட்டணி குறித்து விமர்சனம் செய்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ரஷ்ட்ரிய லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் வாக்கு எண்ணுகின்ற வரையில் மட்டுமே ஒன்றாக இருப்பதை பார்க்க முடியும்.

மேலும், நீங்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்போது தவறு செய்தால், லக்னோவில் கலவரக்காரர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். அவர்களின் ஆட்சி அமையும் பட்சத்தில் மாஃபியா அரசு வரும். சாதிவெறி வரும். ஆனால் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில் உத்தர பிரதேச மாநிலம் நம்பர் ஒன்னாக மாற்றுவோம். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார்.

Source: Maalaimalar

Image Courtesy:Tribune India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News