2024'ல் தமிழ்நாடு மோடியின் பக்கம்தான் - அமெரிக்காவில் பேசிய அண்ணாமலை திட்டவட்டம்
தமிழக மக்கள் மோடிக்கு தான் வாக்களிப்பார்கள் என அமெரிக்காவில் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
By : Mohan Raj
தமிழக மக்கள் மோடிக்கு தான் வாக்களிப்பார்கள் என அமெரிக்காவில் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த செப்டம்பர் 30ம் தேதி அமெரிக்காவின் மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார். இம்மாதம் 8'ம் தேதி அவர் வாஷிங்டன் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாட்டு பா.ஜ.க நண்பர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் 9'ம் தேதி அண்ணாமலை பேசினர்.
அப்பொழுது ஒன்றரை மணி நேரம் 8 ஆண்டுகளில் மோடி அரசு செய்த சாதனைகளை பற்றி அவர் விவரித்தார். அப்போது தமிழக அரசியல் குறித்த அண்ணாமலை பேசியதாவது, 'தமிழக அரசியல் களம் இதற்கு முன்பு தனி நபர் ஆளுமை சார்ந்து இருந்தது. தற்போது சித்தாந்த ரீதியான போட்டிக்களமாக மாறி உள்ளது. தமிழகத்தின் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது மொத்தம் உள்ள 66 ஆயிரம் ஓட்டு சாவடிகளில் 90% சாவடிகளில் பா.ஜ.க கமிட்டிகளை அமைத்துள்ளது மத்திய அமைச்சர்கள் தேசிய தலைவர்கள் என யார் வந்தாலும் ஓட்டு சாவடி கமிட்டி கூட்டத்திற்கும் அவர் தலைவர் வீட்டிற்குத்தான் அழைத்துச் செல்கிறோம்.
முன்பு தி.மு.க எதாவது அவதூறு கருத்து பேசினால் பதிலளிக்க யாருமே இல்லை இப்போது தி.மு.க'விற்கு உடனுடன் பதிலடி கொடுக்கப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் வெல்வார்? யார் பிரதமராக வருவார் என தமிழகத்தின் குக்கிராமத்தில் கேட்டாலும் மோடி தான் பிரதமர் என உறுதியாக கூறுகின்றனர். கடந்த 2019 தி.மு.க அணிக்கு ஓட்டு போட்டதால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டனர். எனவே 2024 லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என பேசினார்.