Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க.வினர் மீது பழிவாங்கும் முயற்சி ! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் !

அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் டெண்டர் விடுவதில் முறைகேடு செய்து சொத்து குவித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வினர் மீது பழிவாங்கும் முயற்சி ! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் !

ThangaveluBy : Thangavelu

  |  10 Aug 2021 7:55 AM GMT

அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் டெண்டர் விடுவதில் முறைகேடு செய்து சொத்து குவித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடுகள் மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகம் உட்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சோதனைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுக நிர்வாகிகள் மீது சோதனை நடத்தப்படுகிறது.

போலீசாரை ஏவிவிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. எனவே எங்கள் மீதான குற்றச்சாட்டை நாங்கள் நீதிமன்றத்தில் நிரூபிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Source: DailyThanthi.

Image Courtesy: Admk Twiter

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/10113004/In-opposition-the-vindictive-The-test-is-conducted.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News