இணையக்கூலிகள் புலம்பி கதறுவார்கள் அதனை புறந்தள்ளி முன்னேறுங்கள் திரு ரஜினி அவர்களே - இயக்குனர் தங்கர் பச்சான்.!
இணையக்கூலிகள் புலம்பி கதறுவார்கள் அதனை புறந்தள்ளி முன்னேறுங்கள் திரு ரஜினி அவர்களே - இயக்குனர் தங்கர் பச்சான்.!
By : Mohan Raj
திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை கிட்டதட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலர் மட்டுமே தனது அரசியல் லாபத்திற்காக அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரையுலகில் இயக்குனரான தங்கர் பச்சான் இணைய கூலிகளை புறந்தள்ளிவிட்டு முன்னேறுங்கள் என பாசிட்டிவாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்த அவர், "வளர்த்து விட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன். தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல் வாதிகள்,அரசியல் தரகர்கள்,அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் புலம்பி கதறுவார்கள்!அதனை புறந்தள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள். #Rajinikanth" என பதிவிட்டுள்ளார்.
திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை திரையுலகில் ஏற்காமல் எதிர்ந்தவர்களும் உண்டு, ஆனால் தற்பொழுது எதிர்த்தவர்கள் கூட ஆதரித்து வருவது திரு.ரஜினிகாந்த் அவர்களின் வெற்றியை மறைமுகமாக குறிக்கிறது.