Kathir News
Begin typing your search above and press return to search.

முருகனின் வேல் வாங்காமல் முகத்தை சுழித்த கனிமொழி - இந்து வெறுப்பின் உச்சமா?

முருகனின் வேல் வாங்காமல் முகத்தை சுழித்த கனிமொழி - இந்து வெறுப்பின் உச்சமா?

முருகனின் வேல் வாங்காமல் முகத்தை சுழித்த கனிமொழி - இந்து வெறுப்பின் உச்சமா?

Mohan RajBy : Mohan Raj

  |  9 Feb 2021 9:50 AM GMT

மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க'வினர் அளித்த வேலை வாங்க மறுத்து கனிமொழி தள்ளிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க சமீபகாலமாக இந்துக்களின் எதிரி அல்ர என்ற நிலைப்பாட்டை பிரச்சாரத்தில் மக்களிடம் கொண்டு சென்று அதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை வாங்க நினைக்கிறது. அதன் வெளிப்பாடாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் வேலை தூக்கி கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். போதாக்குறைக்கு ஸ்டாலின் மனைவி துர்கா அவர்களை கோவில் கோவிலாக சென்று நூதனமாக பிரச்சாரம் செய்ய வைக்கின்றனர்.

இந்த நிலையில் சென்ற வாரம் தூத்துக்குடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழியிடம் விநாயகர் சிலை தரப்பட்ட போது அதனை வாங்காமல் தள்ளி வைத்து இந்துக்களை அவமதித்தார். அதனை தொடர்ந்து தற்பொழுது முருகப்பெருமானின் வேல் வாங்காமல் கனிமொழி தள்ளி வைத்தது இந்துக்களை மேலும் அவமதித்தது போலாகிவிட்டது.

மதுரையில் மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க'வினர் அளித்த முருகப்பெருமான் வேலை கனிமொழி எம்.பி வாங்க மறுத்து தள்ளிவிட்டார். மதுரை சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி நடக்கிறது. அதை பார்வையிட சென்ற போது வடக்குமாசி வீதி தி.மு.க வட்ட செயலாளர் பாலு, பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் கனிமொழிக்கு வெண்கலத்தால் ஆன வேல் கொடுக்க முயன்றனர். டென்ஷன் ஆன கனிமொழி முகத்தை சுளித்துக்கொண்டு வாங்க மறுத்தார். இதனால் வேல் குடுத்த தி.மு.க காரரும் அதிர்ச்சியடைந்தார் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கனவே திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை பற்றி அவதூறாக பேசுவது, கறுப்பர் கூட்ட விவகாரத்தில் அமைதி காத்தது, விநாயகர் சிலையை தள்ளி வைத்தது என இந்து வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் கனிமொழி அதன் தொடர்ச்சியாக வேல் வாங்காமல் அவமதித்திருப்பது இந்துக்களை இழிவாக நடத்தியது போன்றதாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News