Kathir News
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி'க்குள் கொண்டு வர மத்திய அரசு ரெடி, மாநில அரசுகள் ரெடியா? - பெட்ரோலிய துறை அமைச்சர் சவால்

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு ரெடி, மாநில அரசுகள் ரெடியா? - பெட்ரோலிய துறை அமைச்சர் சவால்

Mohan RajBy : Mohan Raj

  |  30 April 2022 6:08 AM GMT

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் பேரல் விலை ஏற்றம் காரணமாகவும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது, இந்த விலை ஏற்றம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரியை குறைக்க வில்லை என தெரிவித்திருந்த நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் அஜித் சிங் கூறியதாவது, 'பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் மத்திய அரசு மகிழ்ச்சி அடையும் என்பது நிலைப்பாடு, ஆனால் மாநிலங்கள் அதற்கு தனியாக இல்லை தயாராக இல்லை என்பதே உண்மை பெட்ரோல், டீசல் மற்றும் மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்தே அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். கடன் அதிகரிக்கும் போது அவர்கள் மற்றவர்களை குறை கூறுகிறார்கள் என கூறினார்,உதாரணத்திற்கு பஞ்சாப் போன்ற மாநிலங்கள் எனவும் எடுத்துரைத்தார்.

மேலும் பேசிய அவர், 'எரிபொருள் துறையில் அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் பெட்ரோல் மற்றும் டீசல் என மதிப்புக்கூட்டப்பட்ட வரிகளை குறைக்கும் விவகாரத்தால் மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யா உக்ரேன் போர் ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும் நாம் இன்னும் தொற்று நோயில் இருந்து மீளவில்லை மேலும் 80 கோடி மக்களுக்கு உணவளிக்கிறோம், தடுப்பூசிகளை அளித்து வருகிறோம். ராணுவ நடவடிக்கை காரணமாக எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19.56 அமெரிக்க டாலரில் இருந்து 130 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தோம் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், மோடி காலத்தில் எரிபொருள் விலை உயர்வு மிகவும் குறைவு இது 30 சதவீதம் மற்றும் 80 சதவீதம் உயர்வு அல்ல, பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு இடையே பெட்ரோல் சில்லரை விலையில் 15 முதல் 20 ரூபாய் வரை வித்தியாசம் உள்ளது' எனவும் அவர் குறிப்பிட்டார்.


Source - One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News