கோவை குண்டு வெடிப்பு பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத வாசகம் - அண்ணாமலை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்கள்
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்களை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
By : Mohan Raj
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்களை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'உண்மையை சொல்ல வேண்டியது பா.ஜ.க'வுக்கு உள்ள கடமை. கோவை மாநகரம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. ஜூன் 2019 தேசிய புலனாய்வு முகமை கோவை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தது. அதில் இருவர் ஏற்கனவே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.
கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததாகவே அதிகாரிகள் கூறிவந்த நிலையில் அந்த குண்டு வெடிப்பில் கோலிக்குண்டு மற்றும் ஆணிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் அந்த குண்டு வெடிப்பில் இருந்த முபின் என்பவர் வீட்டை சோதனை செய்ததில் 55 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பேட்டரி உள்ளிட்ட வெடிபொருள்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால் அதனை அரசு முறையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளது, குண்டு வெடிப்புக்கு இரு நாட்களுக்கு முன்னதாக அக்டோபர் 21-ல் ஜமோசா முபின் whatsapp ஸ்டேட்டஸில் தற்கொலை தாக்குதல் செய்யும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அதில் எனது மரணத்தை ஏற்றுக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஸ்டேட்டஸ இரு நாட்களுக்கு முன்பே வைத்துள்ளார்' என்ற அதிர்ச்சி தகவலை அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.