Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்லாம் பற்றி அவதூறு - காங்கிரஸ் தலைவர் அழகிரி பொங்கி எழுந்தார் !

Breaking News.

இஸ்லாம் பற்றி அவதூறு - காங்கிரஸ் தலைவர் அழகிரி பொங்கி எழுந்தார் !

Mohan RajBy : Mohan Raj

  |  22 Sep 2021 4:45 AM GMT

இந்து கடவுள்கள் பற்றி கறுப்பர் கூட்டம் போன்ற நபர்கள், திராவிடர் கழகத்தினர் இழிவாக பேசியபோது கண்டுகொள்ளாத தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இஸ்லாமியர்களை பற்றி ஒரு நபர் பேசியுள்ளதற்கு எதிராக பொங்கியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "யோகக் குடில் சிவயோகி சிவகுமார் என்ற நபர் பொது வெளியிலும், வலைத்தள பதிவுகளிலும் இழிவான ஆபாச வார்த்தைகளை பேசி வன்மையான கருத்துகளை பகிர்ந்துள்ளார். இஸ்லாமியர்களை பற்றியும், இறைத்தூதர் முகமது நபி பற்றியும், அவர்களின் தொழுகை முறைகளை பற்றியும் அநாகரீகமாக விமர்சித்து உள்ளார். தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சிவகுமாரை காலதாமதமின்றி கைது செய்த போலீசாரை பாராட்டுவதுடன், இஸ்லாமிய சமுதாயத்தினர் புண்படும் வகையில் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புகிற வகையில் தொடர்ந்து செயல்படுகிற 7 சிவகுமார் போன்ற சமூக விரோத சக்திகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

மேலும் இந்து மத கடவுள்கள் பல சமயங்களில் திராவிடர் கழகம், கறுப்பர் கூட்டம் போன்ற நபர்களால் அவமதிக்கப்படும்போது இவர் அமைதியாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Source - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Next Story
கதிர் தொகுப்பு
Trending News