Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. சொல்வதை எல்லாமே ஏற்க முடியாது - கொதித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

தி.மு.க. சொல்வதை எல்லாமே ஏற்க முடியாது - கொதித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 8:06 AM GMT

தி.மு.க. சொல்வதை எல்லமே ஏற்பது எங்களின் வேலை கிடையாது என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: உதய்பூரில் 3 நாட்களாக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்சியில் 5 மாற்றங்கள் நடக்க உள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்தால் ஆலோசனை சொல்கின்ற நபர் மட்டுமே. அவர் சொல்வதை ஏற்பதா வேண்டாமா என்பதை பணம் கொடுக்கின்ற காங்கிரஸ் கட்சி மட்டுமே முடிவு செய்யும்.

மேலும், பேரறிவாளனை ஒரு தியாகி போன்று சித்தரித்து அவரது விடுதலையை கொண்டாடுவது சரியில்லை. தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்படும் வேறு. அதே நேரத்தில் தி.மு.க. சொல்வதை எல்லாம் ஏற்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் வேலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News