Kathir News
Begin typing your search above and press return to search.

எங்களுக்கு ஏதும் செய்யவில்லை" - ஜெய்பீம் சூர்யா'வின் முகத்திரையை கிழித்த நிஜ 'செங்கேனி' !

எங்களுக்கு ஏதும் செய்யவில்லை - ஜெய்பீம்  சூர்யாவின் முகத்திரையை கிழித்த நிஜ செங்கேனி !

Mohan RajBy : Mohan Raj

  |  15 Nov 2021 12:00 PM GMT

'ஜெய்பீம்' படம் மூலம் நடிகர் சூர்யா குழுவினர் கோடி, கோடியாக சம்பாரித்தார்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என நிஜ செங்கேனி பார்வதி பகீரங்கமாக சூர்யாவின் நாடகத்தை பற்றி அம்பலப்படுத்தியுள்ளார்.


நடிகர் சூர்யா தயாரித்து, நடித்துள்ள படம் ஜெய்பீம், இதில் உண்மை சம்பவத்தை படமாக்குகிறேன் என்ற பெயரில் நீதியரசர் சந்துரு வாழ்வில் கண்ட வழக்கு ஒன்றை எடுத்து நடிகர் சூர்யீ படமாக்கினார். அதில் இருளர் இனத்தை சேர்ந்த ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் பொய் வழக்கு போடப்பட்டு அடித்து கொல்லப்படும் கதையை கூறி ஓ.டி.டி'யில் வெளியிட்டு லாபம் கண்டார். இதற்கிடையில் உண்மை சம்பவம் என்ற போர்வையில் வன்னியர் சமூகத்தை வேறு தவறாக சித்தரித்திருந்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதித்த நடிகர் சூர்யா, இதுவரை தனக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அந்த படக்கதையின் உண்மை நாயகியான பார்வதி. மேலும், தாங்கள் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் பார்வதி மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, தனது கணவரையும், தன்னையும் மையமாக வைத்து இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறோம் என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளரான சூர்யா உட்பட யாரும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், தங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வை படமாக எடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சூர்யா இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் உதவ முன்வரவில்லை எனவும் வேதனை தெரிவித்திருக்கிறார். இது மட்டுமின்றி, தாங்கள் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் இருளர் இனம் கிடையாது எனவும் நிஜ செங்கேனியான பார்வதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இரண்டு மகன்கள் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது ஒண்டிக்குடிசையில் மகள், மருமகனுடன் ஜீவணத்திற்கு கஷ்டப்படுவதாகவும் கண் கலங்கியிருக்கிறார்.

படத்தில் நிஜத்தை மட்டும் எடுத்துள்ளதாக பெருமை பீற்றிக்கொள்ளும் சூர்யா தரப்பு இதற்கு என்ன சொல்லப்போகிறது என பார்க்கலாம்.


Source - One India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News