Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க மீண்டும் ஆட்சி என்பது கானல் நீர் - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

தி.மு.க மீண்டும் ஆட்சி என்பது கானல் நீர் - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

தி.மு.க மீண்டும் ஆட்சி என்பது கானல் நீர் - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

Mohan RajBy : Mohan Raj

  |  28 Dec 2020 8:54 AM GMT

தி.மு.க ஆட்சிக்கு வருவது கானல் நீர்தான் என கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசி அவர் கூறியதாவது, "தி.மு.க'வை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. ஏற்கனவே மக்கள் தி.மு.க'வை நிராகரித்தும் ஒதுக்கியும் வைத்துள்ளனர்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "தற்போது அவர்களே தி.மு.க'வை நிராகரிக்க வேண்டும் என்று பொருள்படும் வகையில் அ.தி.மு.க'வை நிராகரிப்போம் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. எனவே தி.மு.க என்னதான் பண பலத்தை பயன்படுத்தினாலும், அ.தி.மு.க காட்டாற்று வெள்ளம் போல் வெற்றி பெறும். தி.மு.க மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவு. அது கானல் நீராகதான் இருக்கும். எம்ஜிஆர் வரலாறு தெரியாமல் எம்.ஜி.ஆர். பேசுகிறார். வாழும் சகாப்தமாக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார். அவரை தொட்டால், அவர்கள் கெட்டார்கள்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News