Kathir News
Begin typing your search above and press return to search.

வெளியே ஜூஸ் பாக்கெட்.. உள்ளே பட்ட சாராயம்.. பிரபல கட்சியின் இளைஞரணி செயலாளர் அதிரடி கைது.!

வெளியே ஜூஸ் பாக்கெட்.. உள்ளே பட்ட சாராயம்.. பிரபல கட்சியின் இளைஞரணி செயலாளர் அதிரடி கைது.!

வெளியே ஜூஸ் பாக்கெட்.. உள்ளே பட்ட சாராயம்.. பிரபல கட்சியின் இளைஞரணி செயலாளர் அதிரடி கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jan 2021 6:08 PM GMT

நாகையில் பாண்டி ஜூஸ் எனக் கூறி ஆயிரம் பாக்கெட் சாராயத்தை கடத்திய அ.ம.மு.க. இளைஞரணி செயலாளரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் பகுதியில் வாகன சோதனையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வேகமாக வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் பாண்டி ஜூஸ் என்ற பெயரில் பாக்கெட்டுகள் நிறைய இருந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குபின் பதில் அளித்தனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் பாக்கெட்டை உடைத்து பார்த்தபோது, அது சாராயம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.50,000 மதிப்புள்ள ஆயிரம் பாக்கெட் சாரயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சார்புதீன் என்பவரை விசாரணை செய்ததில், அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காரைக்கால் மாவட்ட இளைஞரணி செயலாளர் என்பதும், திருவாரூக்கு விற்பனை செய்வதற்கு எடுத்து சென்றதும் தெரியவந்துள்ளது. அரசியல் பிரமுகரே இப்படி கள்ளச்சாராயத்தை கடத்தி சென்ற சம்பவம் திருவாரூர், காரைக்கால் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News