Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து 2வது நாளாக காங்கிரஸ் எம்.பி. போராட்டம்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி 2வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருவது அக்கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து 2வது நாளாக காங்கிரஸ் எம்.பி. போராட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  26 Nov 2021 7:02 AM GMT

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி 2வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருவது அக்கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

மத்திய அரசு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையிலான நலத்திட்டங்கள் அளிக்கப்படுகிறது. தி.மு.க அரசு அமைந்த பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் நடத்தாமல் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த மனு பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் ஆட்சியர் எடுக்கவில்லை என்று ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. ஆனால் திமுக அரசை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி போராட்டம் நடத்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 7 Tamil

Image Courtesy: Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News