கடைக்கோடி தொண்டனும் அ.தி.மு.க.வில் முதல்வராகலாம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
கடைக்கோடி தொண்டனும் அ.தி.மு.க.வில் முதல்வராகலாம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
![கடைக்கோடி தொண்டனும் அ.தி.மு.க.வில் முதல்வராகலாம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.! கடைக்கோடி தொண்டனும் அ.தி.மு.க.வில் முதல்வராகலாம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/5e1f1edec6fb78881ecc0b9283007b3b.jpg)
ஒரு தொண்டன் முதலமைச்சராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை தொடக்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடர்பாக பல கருத்துக்களை பேசினார். அதில், தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக.
அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. எதிரிகள் கூட உச்சரிக்கக்கூடிய வார்த்தை எம்.ஜி.ஆர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அதிமுகவையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் பிரிந்துள்ளது. ஆனால் பிரிந்தபின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே.
அதனை நிகழ்த்திக்காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே. கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் பிரிந்தன. மீண்டும் ஒன்று சேர்ந்தனவா? அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர், எம்.பி, அமைச்சர், எம்.எல்.ஏ., என பல்வேறு பதவிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமை. சில புல்லுருவிகள் அதிமுகவை வீழ்த்த நினைத்தன. அது தவிடுபொடியாகிவிட்டது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். இன்று நான் முதலமைச்சராக இருக்கலாம். நாளை ஒபிஎஸ் முதலமைச்சராக இருக்கலாம்.
நாளை தொண்டர்களில் ஒருவர் முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது. ஒரு தொண்டன் முதலமைச்சராவது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். இவ்வாறு அவர் பேசினார்.