இனிமேல் மக்கள் நீதி மய்யம் உருமாறும்: கமல்ஹாசன் பரபரப்பான வீடியோ வெளியீடு.!
‘‘என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

''என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த கட்சியில் இருந்த பலர் விலகி சென்றனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உயிரே உறவே தமிழே, ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து பல வெற்றி பாடம் கண்டது நாம் அறிந்த சரித்திரம்.
மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலில் மின்ன வைத்ததுதான் சிலருக்கு சர்வதிகாரமாகத் தெரிகிறது. திறமையின் அடிப்படையில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் சிலருக்கு வழி வகை தந்தது அன்று அவர்கள் வளர வைத்தது ஜனநாயகமாக தெரிந்தது. ஆனால், இன்று அவர்கள் கண்ணுக்கு மறந்து போய்விட்டது.
கூட்டணி குறித்து நான் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்தவை. தோல்விக்குப்பின் அவரவர்களின் ஜனநாயக கடமையை ஏற்றுக்கொள்வது தார்மீக கடமை. நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட குழி தேடுவது சிலருக்கு ஜனநாயமாக இருக்கிறது.
அது ஜனநாயமல்ல. இதற்கெல்லாம் நம் மய்யம் சோர்ந்து போகாது. ஆனால், யாத்ரிகர்கள் ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக இருப்பவர்கள் வேறிடம் செல்வார்கள். திரும்பவும் வருவார்கள். ஆனால், நம் நீர்நிலைகள் ஊரணிகளை அசுத்தப்படுத்த விடமாட்டோம். உறுதியுடன் பணியை செய்வோம். செயல்வீரர்கள் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பீர்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.