Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாகுமரி: ஸ்டாலின் பெயரை கரி பூசி அழித்த தி.மு.க.வினர்.!

கன்னியாகுமரி: ஸ்டாலின் பெயரை கரி பூசி அழித்த தி.மு.க.வினர்.!

கன்னியாகுமரி: ஸ்டாலின் பெயரை கரி பூசி அழித்த தி.மு.க.வினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2021 4:53 PM GMT

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து எழுதப்பட்ட சுவரை அதே கட்சியை சேர்ந்தவர்கள் கரி பூசி அழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினுக்கு பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லைகளில் வாழ்த்து தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். அதே போன்று களியக்கவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் உள்ள சுவர் விளம்பரங்களை அக்கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் கரி மற்றும் ஆயில் ஊற்றி அழித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுகவை சேர்ந்த திருவட்டார் ஒன்றிய துணை செயலாளர் கலை கிரி தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கட்சியில் ஒற்றுமை இல்லாமல் உள்ளனர். இவரது தலைவர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News