Kathir News
Begin typing your search above and press return to search.

பிபின் ராவத் மறைவை சமூக வலைதளத்தில் கொண்டாடியவர்கள் மீது நடவடிக்கை - கர்நாடக அரசு அதிரடி !

பிபின் ராவத் மறைவை சமூக வலைதளத்தில் கொண்டாடியவர்கள் மீது  நடவடிக்கை - கர்நாடக அரசு அதிரடி !

Mohan RajBy : Mohan Raj

  |  12 Dec 2021 7:29 AM GMT

பிபின் ராவத் மறைவை கொண்டாடும் வகையில் சமூக வலை தளத்தில் வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.



நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த சில தினங்கள் முன் தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவை கொண்டாடி சிலர், சமூக வலை தளங்களில் மகிழ்ச்சியான ஸ்மைலி உள்ளிட்டவைகளில் பதிவு செய்துள்ளனர். நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்தவருக்கு வீர வணக்கம் செலுத்தாமல், அதை கொண்டாடியது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.



இதுகுறித்து ஹாவேரியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று கூறியதாவது, "பிபின் ராவத் மரணம் குறித்து சில சிதைந்த மனங்கள் டுவிட்டரில் பதிவிட்டு கொண்டாடியுள்ளனர். இதை ஒவ்வொரு இந்தியனும் மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்க வேண்டும்.

நாட்டுக்காக பெரிய ராணுவத்தை வழிநடத்தியவர். பதவியின் கண்ணியம் குறித்து பொறுப்பற்ற முறையிலான செயல்கள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, மாநில போலீஸ் டி.ஜி.பி'க்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த அசிங்கத்தை மன்னிக்க வார்த்தை இல்லை. கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News