Kathir News
Begin typing your search above and press return to search.

அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முக்கிய தலைவர்.!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.சி.சாக்கோ 74, கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் எம்.பியாகவும், பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முக்கிய தலைவர்.!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2021 2:14 PM GMT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.சி.சாக்கோ 74, கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் எம்.பியாகவும், பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர் வெளியேறுவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.




இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பு வெளியிட்டார். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ளேன். இந்த முடிவைப் பற்றி நான் பல நாட்களாக ஆலோசனை நடத்திய பின்னரே கட்சியை விலக முடிவெடுத்தேன்.

கேரளா காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது கடினம் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News