Kathir News
Begin typing your search above and press return to search.

ஜவுளி தொழிலை காப்பாத்த முயற்சி எடுங்கள்: பா.ஜ.க. தலைவருக்கு கொங்கு ஈஸ்வரன் வேண்டுகோள்!

ஜவுளி தொழிலை காப்பாத்த முயற்சி எடுங்கள்: பா.ஜ.க. தலைவருக்கு கொங்கு ஈஸ்வரன் வேண்டுகோள்!

ThangaveluBy : Thangavelu

  |  18 May 2022 3:25 AM GMT

நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளி தொழில் மிகவும் நலிவடைந்து வருவதை உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: பஞ்சு ஏற்றுமதியை உடனடியாக நிறுத்தினால் மட்டுமே இந்தியாவில் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். வரலாறு காணாத வகையில் நூல் விலை ஏற்றத்தால் தமிழகத்தில் ஜவுளி துறையை சார்ந்தவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இந்த சூழ்நிலை நீடிக்கின்றது. இதற்கு ஒரே தீர்வு பஞ்சு ஏற்றுதியை நிறுத்தினால் மட்டுமே ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். இந்த பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொண்டு செல்ல வேண்டும். இதனை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கொங்கு ஈஸ்வரன் கூறினார்.

Source,Image Courtesy One India Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News