Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. வெற்றியை கொண்டாடிய முகவர் வாக்குச்சாவடியிலேயே மரணம்!

திமுக வெற்றியை கொண்டாடி வாக்குச்சாவடி முகவர் சம்பவ இடத்திலேயே மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியது. இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று வந்தனர்.

தி.மு.க. வெற்றியை கொண்டாடிய முகவர் வாக்குச்சாவடியிலேயே மரணம்!

ThangaveluBy : Thangavelu

  |  22 Feb 2022 12:57 PM GMT

திமுக வெற்றியை கொண்டாடி வாக்குச்சாவடி முகவர் சம்பவ இடத்திலேயே மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியது. இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று வந்தனர்.

அதே போன்று கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக கூட்டணி 23 இடங்களில வெற்றி பெற்றது. இதனை அக்கட்சித்தொண்டர்கள் மேளத்தாளங்கள் முழங்க நடனங்கள் ஆடி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது 1வது வார்டு கோட்டை பகுதி வாக்குச்சாவடியின் திமுக முகவர் பயாஸ், வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே வெற்றியை கொண்டாடினார். அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வெற்றியை கொண்டாடிய திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News