Kathir News
Begin typing your search above and press return to search.

ஏம்பா உதயநிதி எதுக்கு விஷம் குடித்த சொல்லட்டுமா.? கருணாநிதி குடும்பத்தை லெப்ட்.. ரைட்.. வாங்கிய வளர்மதி.!

ஏம்பா உதயநிதி எதுக்கு விஷம் குடித்த சொல்லட்டுமா.? கருணாநிதி குடும்பத்தை லெப்ட்.. ரைட்.. வாங்கிய வளர்மதி.!

ஏம்பா உதயநிதி எதுக்கு விஷம் குடித்த சொல்லட்டுமா.? கருணாநிதி குடும்பத்தை லெப்ட்.. ரைட்.. வாங்கிய வளர்மதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2021 5:18 PM GMT

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றியுள்ளது. அதில் முதல் கண்டன தீர்மானமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு போடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஸ்டாலின் மிகவும் தகாத வார்த்தைகளில் பேசி வருகின்றார் என்பது குற்றச்சாட்டு ஆகும்.

இதன் பின்னர் இந்த பொதுக்குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான வளர்மதி உதயநிதி ஸ்டாலின் பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பேசிய உதயநிதி... சசிகலாவின் காலில் எடப்பாடி விழுந்தார் என மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இதற்கு பல பெண் தலைவர்கள் உதயநிதிக்கு கண்டனங்களை பதிவிட்டனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் அமைப்புச் செயலாளர் வளர்மதி பேசும்போது: வரஉள்ள 2021 பொதுத் தேர்தல் என்பது ராமாயணப் போர். எடப்பாடியும், ஓ.பிஎஸ்சும் ராமர் லட்சுமணர்கள். ராவணன் கூட்டம் என்பது மு.க.ஸ்டாலின் கூட்டம். எம்.ஜிஆர் அன்றைக்கே கருணாநிதியை தீய சக்தி என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தத் தேர்தலோடு திமுகவின் ஆட்டம் முடிக்கப்பட வேண்டும்.

நம்மைப் பார்த்து ஊழழ் ஆட்சி என்று ஸ்டாலின் குடும்பம் பேசி வருகிறது. ஊழலாட்சி என்று சொல்லக் கூடிய அந்த கூட்டமெல்லாம் உத்தமர் காந்தி வீட்டுப் பேரன்களா? கருணாநிதி வீட்டுப் பிள்ளைகள்தானே... ஊழல் செய்தே பழக்கப்பட்டவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். எங்களைப் பார்த்து ஊழல் என்பது கேலியாக உள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஸ்டாலின் கூட்டம் முதலமைச்சரை பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார்கள். நான் ஒன்றை மட்டும் சொல்லுவேன்.. அண்ணன் எடப்பாடியாரைப் பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசினால் நாங்களும் திருப்பிப் பேசுவோம் நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். உங்களைப் பற்றித் எங்களுக்கு தெரியாதா.. எடப்பாடியாரைப் பற்றி பேசும் உதயநிதியே... நீ விஷம் குடித்தாயே ஏன் குடித்தாய்? யாருக்காக குடித்தாய்? சொல்லட்டுமா... உன்னோட கதை எடுத்துவிட்டால் நாறிப் போய்விடும்.

நாங்கள் பேசினால் நாடு சிரித்து போயிடும்.. தங்கத்தின் தங்கமாக விளங்கும் எங்கள் அண்ணன் எடப்பாடியாரைப் பார்த்து பேசினால் நாக்கு அழுகிப் போய்விடும் என்றார். இவர் சொல்வது ஒரு நடிகைக்காக உதயநிதி விஷம் குடித்தார் என அதிமுக ஐடிவிங்கை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News