பொங்கல் தொகுப்பு பொருள் முறைகேட்டில் சிறை செல்பவர்கள் யார்? - பல்லடம் கூட்டத்தில் அண்ணாமலை வைத்த சஸ்பென்ஸ்
'பொங்கல் தொகுப்பு முறைகேட்டில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் பாருங்கள்' என்ன பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்.
By : Mohan Raj
'பொங்கல் தொகுப்பு முறைகேட்டில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் பாருங்கள்' என்ன பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான் புதூர் பகுதியில் பா.ஜ.க'வின் எட்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'கடந்த எட்டு ஆண்டுகளில் 14 லட்சம் பேர் கான்கிரீட் வீடுகளை கட்டி சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் பிரதமர் மோடியால்' என்றார்.
இந்தியாவில் பெண்களுக்கு வெறும் இரண்டு சதவீதம் சொத்து மட்டும்தான் இருந்தது அந்த நிலை தற்பொழுது மாறி 68% பெண்களுக்கு அவர்களது பெயரில் பா.ஜ.க அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தின் வினாத்தாளில் எது கீழ் சாதி என கேள்வி கேட்டிருக்கிறார்கள் இதுதான் திராவிடம் மாடல் ஆட்சியா? என கேட்கும் நிலைமைக்கு பொதுமக்கள் வந்துள்ளனர் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், 'நான்கு வருடம் வண்டி ஓடும் நான்கு வருடம் முடிந்த பிறகு பொங்கல் தொகுப்பு முறைகேட்டில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என பாருங்கள்' என கூறினார்.