Kathir News
Begin typing your search above and press return to search.

11 சென்ட் நிலத்தை அபகரித்த தி.மு.க. பிரமுகர்: மீட்டுக்கொடுக்க 92 வயது மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மூதாட்டியிடம் திமுக பிரமுகர் ஒருவர் நிலத்தை அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 சென்ட் நிலத்தை அபகரித்த தி.மு.க. பிரமுகர்: மீட்டுக்கொடுக்க 92 வயது மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2021 4:23 AM GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மூதாட்டியிடம் திமுக பிரமுகர் ஒருவர் நிலத்தை அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா ஏ.கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி திருபுரசுந்தரி. இவருக்கு அந்த கிராமத்தில் 11 சென்ட் நிலம் இருந்துள்ளது. திமுக கிளைச்செயலாளர் வைத்தியநாதன் என்பவர் மூதாட்டி திரிபுரசுந்தரியின் நிலத்தை லாபகமாக முள்வேலி அமைத்து தன்னுடையது என்று போர்டு வைத்துள்ளார். இதனை கண்ட மூதாட்டி வைத்தியநாதனிடம் சென்று கேட்டுள்ளார்.

ஆனால் வைத்தியநாதன் மூதாட்டியிடம் சண்டை போட்டுள்ளார். இது என்னுடைய நிலம் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி திரிபுரசுந்தரி பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் மூதாட்டி புகாருக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.





இதனால் வேறு வழியின்றி மூதாட்டி கண்டபுரம் கடைவீதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ஜெயா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது உறவினர்களுடன் சேர்ந்து மூதாட்டி திரிபுரசுந்தரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மூதாட்டியிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை மீட்ட போலீசார், திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

சாதாரண திமுக கிளைச்செயலாளராக இருப்பவரே தைரியமாக 11 சென்ட் நிலத்தை அபகரித்தார் என்றால், மேல் மட்டத்தில் இருக்கின்ற திமுக நிர்வாகிகள் எவ்வளவு நிலத்தை வளைத்து போடுவார்கள். தமிழக மக்கள் தெளிவாக பார்த்து வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவர்களின் திருட்டு தனத்திற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உண்மை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News