Begin typing your search above and press return to search.
எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை!
அதிமுகவின் நிறுவனர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுக நிர்வாகிகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

By :
அதிமுகவின் நிறுவனர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுக நிர்வாகிகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதே போன்று தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் 34வது நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
Source: Daily Thanthi
Image Courtesy: Twiter
Next Story