'யாருதான்பா இங்கு புனிதர்?' - ஜம்பமாக கேள்வி எழுப்பும் கே.என்.நேரு
'அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்' என அமைச்சர் கே.என்.நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
'அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்' என அமைச்சர் கே.என்.நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது, 'ஓராண்டில் நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்தார் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள் நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை அப்படிச் சம்பாதித்தால் அது மக்களுக்கு தான் செலவழிக்கப்படும். ஏன் கே.என்.நேரு என்ன புனிதரா என கேட்கிறார்கள்! அரசியல் யார்தான் புனிதர்கள்?இது என்ன சங்கரமடமா? ஏற்கனவே என் மீது 19 வழக்குகள் பதியப்பட்டன அதிலிருந்துதான் வெளியே வந்துள்ளோம்.
'அரசியலில் யார்தான் புனிதர்?' என அமைச்சர் கே.என் நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.